புதுவை ரோமன் ரோலன்ட் நூலகத்தில் பணிபுரியும் புதுவை தமிழ் நெஞ்சன் என்ற புனைபெயர் கொண்ட திரு அசோகன் அவர்களின் மகள். பன்னிரண்டு அகவை கொண்ட மாணவி. தமிழ்ச்சிட்டு, தாமரை, கரந்தடி, உண்மை, சூழல், நாளைவிடியும், இனிய ஹைக்கூ, தச்சன், செம்பருத்தி, ஏழைதாசன், பட்டாம்பூச்சிகள் போன்ற இதழ்களில் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. ஜீவா விருது, புதுச்சேரி மாநில கலை இலக்கிய பெருமன்ற விருது போன்ற பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.