கவிஞர் யாழினி முனுசாமி, ஜெ.முனுசாமி என்னும் இயற்பெயரில் அறியப்பட்டவர், பிறந்தது செய்யாறு வட்டம் மோரணம் கிராமம். பல்வேறு இதழ்களில் இவரது கவிதைகளும், கவிதை குறித்த விமர்சனங்களும் இடம் பெற்றுளன. எஸ்.ஆர்.எம் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர். "முரண்களரி" என்னும் இலக்கிய அமைப்பை நண்பர்களுடன் இணைந்து சென்னையில் நடத்தி வருகின்றார். சில விவரணப் படங்களையும் இயக்கியுள்ளார். உதிரும் இலை இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு.