தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பெயல் மணக்கும் பொழுது
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு(2007)
ஆசிரியர் :
மங்கை, அ
பதிப்பகம் : மாற்று வெளியீடு
Telephone : 919382853646
விலை : 130
புத்தகப் பிரிவு : கவிதைகள் - தொகுப்பு
பக்கங்கள் : 280
புத்தக அறிமுகம் :
"சொல்லாத சேதிகள்" என்னும் கவிதைத்தொகுப்பில் தொடங்கிய ஈழப்பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு பயணதில் இருபது ஆண்டுகளுக்குப்பின் 92 ஈழத்துப் பெண் கவிஞர்களின் ஆக்கங்களின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. இணையம் தவிர்த்து அச்சில் வெளியான ஆக்கங்களே எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
ஊடக மதிப்புரைகள்
1 2 3 4
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : ஆனந்தவிகடன்
மதிப்புரை வழங்கியவர் பெயர் : ஆசிரியர் குழு

ஈழப் பெண்கவிஞர்களின் கவிதைகளை ஒரு சேரப் படித்து ப் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது இந்தத் தொகுப்பு. சித்ரலேகா மௌனகுரு, வ.கீதா, அ.மங்கையின் கட்டுரைகள் ஈழப் பெண் கவிஞர்களின் கவிதைப் பின்புலத்தை விளங்கிக் கொள்ள உதவும். இந்தத் தொகுப்பிலிருந்து ஆளியாளின் ஒரு கவிதை.... அடையாளம் பிறந்த வீட்டில் கறுப்பி அண்டை நாட்டில் சிலோன் அகதிப் பொண்ணு இலங்கை மத்தியில் "தெமள" வடக்கில் கிழக்கச்சி மீன்பாடும் கிழக்கில் நானோர் மலைக்காரி மலையில் மூதூர்க்காரியாக்கும் ஆதிக் குடிகளிடம் திருடப்பட்ட தீவாயிருக்கும் என் புகுந்த நாட்டில் அப்பாடா! பழையபடி நான் கறுப்பியானேன்! - - - 06.06.2007 - - - -

1 2 3 4

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan