தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


இழை இழையாய் இசைத்தமிழாய்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு (2008)
ஆசிரியர் :
மம்மது, நாinfo@tamilinnisai.org
பதிப்பகம் : தென்திசை பதிப்பகம்
Telephone : 914424338169
விலை : 100
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 176
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
எந்த ஒரு சமூகமும் அதற்கான இசையும், ஆடலும் இன்றி இருந்ததில்லை. நாதத்தின் தலைவனாக இறைவனைப் பார்த்த தமிழ்ச் சமூகம், அந்த இறைவனை ஆடல் வல்லன், கூத்த பெருமான், நடராசன் என்று போற்றியும் வணங்கியும் வந்திருக்கிறது. சிலப்பதிகாரம், கல்லாடம், பஞ்சமரபு, பெரியபுராணம் ஆகியவற்றின் வழியாக இசை இலக்கணம் உருவாக்கும் நா.மம்மது அவர்களின் கட்டுரைகள் இசையையும் தமிழையும் ஒருசேர உணர வைக்கின்றன.
ஊடக மதிப்புரைகள்
1 2
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : தினகரன்
மதிப்புரை வழங்கியவர் பெயர் : ரீடர்

தமிழிசை என்பது என்ன? திருமுறைகளும், திருப்பாசுரங்களும் பாடுவது மட்டுமே தமிழிசை என்றொரு கருத்துப் பலருக்கு உண்டு. கீதம், கிருதி, கீர்த்தனை, பதம், பாடுவது அதாவது அரங்கிசை என்ற செவ்விசை ; எடுப்பு ; தொடுப்பு, முடிப்புடன் ( பல்லவி, அனுபல்லவி, சரணம் ) பாடுவது தமிழிசை அல்ல என்று சொல்கிறவர்களும் உண்டு. அப்படியென்றால் அரங்கிசை என்ற செவ்விசை தமிழிசை இல்லையா? தியாகராசரின் தெலுங்குக் கீர்த்தனைகளின் 'சாகித்தியம்' என்ற பாடல் தெலுங்கு மொழியில் இருந்தாலும் அதன் இசை தமிழிசையே. தஞ்சை அரண்மனை வீணைக் கலைஞராகத் திகழ்ந்த க்காளகஸ்தி ஐயர், அவர் மகள் சீதம்மா, அவர் மகன் தியாகராசர் என வழிவழியாக வந்த தமிழ் மரபு இசையே அது. 'பாரமல் பார்த்த நெஞ்சம் ஜம், சசச்சம் ஜம் சசச்சம்' என்ற பாடல் மெட்டும் ஒலிக்கிறது இது இரவல் அல்லவா? என்ற கேள்வி நம் மனிதில் எழலாம். கலை என்பதே போலச் செய்தல்தான், அதில் இரவல் என்பது தவறே அல்ல. நகல் எடுப்பதுதான் தவறு. புகழ்பெற்ற பாடல்களின் மெட்டுக்களைப் பாரதியே தன்பாடலுக்குப் பயன்படுத்தியிருக்கிறார். மக்கள் அறிந்த, மக்களுக்குப் பிடித்த மெட்டில் பாடல்களைத் தருவது இசையமைப்பாளரின் கடமையுங் கூட. இதிலிருந்து நாம் அறியவேண்டியது, பாடல் தமிழாக இருந்தாலும் இசை மேலை இசை ; அதுபோல பாடல் தெலுங்கில் இருந்தாலும் அதன் இசை தமிழிசையே. தமிழ் இசை பல்வேறு வகைமையுடையது ; நாட்டார் இசை, நாடக இசை, நாட்டிய இசை, பக்தி இசை, அரங்கிசை, செவ்விசை, இரங்கல் பாட்டு, மல்கலப்பாட்டு, மெல்லிசை, திரை இசை என்று அதன் வகைமைகள் பிரிந்து கொண்டே செல்லும். இந்த வகைமைகளும் பல்வேறு பிரிவுகளால் பெருகியுள்ளன. இப்படி தமிழிசையின் வரலாற்றையும், நம்மவர்கள் உருவாக்கிய இசைக் கருவிகள் பற்றியும் சிலாகித்து எழுதியுருக்கிறார் ந.மம்மது. 'இழை இழையாய் இசைத்தமிழாய்' என்ற இந்த நூல் தமிழர்களின் ஆடற் கலைகள் பற்றியும் பேசுகிறது. வேலன் வெறியாடல், தேர்க்குரவை, குரவைச் சிந்து, கும்மி, கோலாட்டம், நையாண்டி மேளம், வள்ளைப்படாடு, நடவுப் பாட்டு என இந்தத்தலைமுறை இழந்ததுதான் எத்தனை? நாதத்தின் தலைவானாக இறைவனை அடையாளப்படுத்தியது தமிழ்ச்சமூகம். அந்த இறைவனை நடராஜன் என்று போற்றியும் வணங்கியும் வந்திருக்கிறது. இப்போது திரை இசைப் பாடல்களும் ஆடல்களுமே தமிழிசை என்று சுருங்கிப் போயிருக்கிறது நம் பண்பாடு. தொலைந்த இசையின் தமிழின் வரலாற்றை சொல்லும் இந்த நூல், போற்றிப் பாதுகாக்க வேண்டிய படைப்பு. - - தினகரன் வசந்தம் 2008.12.07 - - -

1 2

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan