ஜொஹான்
வேலன்டைன் ஆந்த்ரே ( Johann Valentin Andreae ) படைத்த கிறிஸ்ட்டியானோபோலிஸ் (
Christianopolis ) எனும் கற்பனை நகரம் ( 1619 )
-
கிறிஸ்டியானோபோலிஸ்
என்பது 700 அடி பக்கமுள்ள சதுரமான நகரம்; 400 குடிமக்கள் வாழ்கிறார்கள். சமய
நம்பிக்கை உடையவர்கள்.
-
நகரைச்
சுற்றிய தீவின் பகுதி வேளாண்மைக்கும், தொழிற்சாலைகட்கும் பயன்படுகிறது.
-
இது
தொழிலாளர்கள் குடியரசு: எல்லோரும் சமத்துவம். பணத்தின் ஆதிக்கம் அறவே இல்லை.
-
நகரம்
பயன்பாட்டிற்கேற்ப, பகுதி (Zone) பிரிக்கப்பட்டுள்ளது. முற்போக்கான கருத்து.
-
அறிவுவழித்
தொழிலும் உடலுழைப்பும் முரணல்ல; இது அவர்கள் தத்துவம். அன்று புரட்சிகரமான
கருத்து.
-
சிந்தனையும்
உடல் உழைப்பும் சேர்ந்த வாழ்க்கை முறை போற்றப்படுகிறது.
-
வேலை
நேரம் எட்டு மணி.
-
தொழில்
வளர ஆய்வு தேவை என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.
-
வேண்டிய
பொருட்கள் அனைத்தையும் நகரில் ஒரு மையமான இடத்தில் பெற்றுக்கொள்கிறார்கள்.
-
யாரிடமும்
பணம் இல்லை.
-
அவரவர்
திறமைதான் செல்வம்.
-
திருமணம்
கிறித்தவச் சடங்குடன் நிகழ்கிறது; ஆண் வயது 24; பெண் வயது 18; பெற்றோர் அனுமதி
தேவை.
-
ஒழுக்கம்,
பக்தி உயர்ந்தவை.
-
குடும்பம்
என்பது கணவன், மனைவி ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள்.
-
ஆறு
வயதுக்குப்பின் குழந்தைகள் பெற்றோரிடம் இல்லை.அவர்களைக் கவனிக்கும் சமுதாய
அமைப்புக்கு அனுப்பப்படுகிறார்கள்.
-
குழந்தைகளைப்
பெற்றோர்கள் பார்க்கலாம்.
-
கல்வி
: 12 துறைகள்
-
ஆசிரியர்கள்
ஆட்சியின் உயர்ந்த நிலையினருடன் தொடர்புகொள்ளும் தகுதி பெற்றவர்கள்.
-
அறிவியல்,
கலைகள் கற்பிக்கப்படுகின்றன.
-
புகழ்
வாய்ந்தவர்கட்கு சிலைகள் உள்ளன; அவை இளைய தலைமுறைக்கு உந்துசக்தி.
-
இசை
முதலிய கலைகட்கும் கோயில் பயன்படுத்தப்படுகிறது.
-
ஆட்சி
: இது தொழிலாளர் குடியரசு. தொழிலாளர் சங்கங்கள் அடிப்படை.
-
பிரதிநிதிகள்
24 பேர்; அவர்களில் மூவர் பொறுப்பிலிருப்பவர்கள் (Aristocracy).
-
வழக்கறிஞர்கள்
இல்லை. மரண தண்டனை இல்லை.
-
கல்வி,
அறிவியல், சமயம், இசை, கலை, அரசு, சமுதாயத் தொடர்புகள் வலியுறுத்தப்படுகின்றன.
வள்ளுவர்
படைக்கும் வையத்துச் சுவர்க்கம்
| வையத்துள்
வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் |
| தெய்வத்துள்
வைக்கப் படும்
|
என்பது
வள்ளுவப் பிரகடனம். வள்ளுவர் தாம் காணும் வையத்தையும் வாழ்வாங்கு வாழ
நெறிமுறைகளையும் முன்வைக்கிறார். அவர் அமைக்கும் முதல் அடிப்படை :
| பிறப்புஒக்கும்
எல்லா உயிர்க்கும் ; சிறப்புஒவ்வா |
| செய்தொழில்
வேற்றுமை யான்
|
இது
எவ்வளவு புரட்சிகரமான கருத்து என்பது அன்றைய நிலையை எண்ணினால் விளங்கும்.
-
மனுதர்மம்:
பிறப்பில் நால்வருணம்; உயர்வு தாழ்வு மாற்ற முடியா அமைப்பு.
-
பிளேட்டோ:
பிறப்பிலேயே மக்கள் தங்கம், வெள்ளி, பித்தளை, இரும்பு போன்றவர்கள்; கடைசி இரு
வகுப்பார் உடல் உழைப்புக்கு மட்டும் தகுதி படைத்தவர்கள்.
-
அரிஸ்டாட்டில்:
பிறப்பிலேயே தாழ்ந்தவர்கள் அடிமைகள்.
-
ஒவ்வுதல்:
இசைதல், ஒத்திருத்தல், பொருந்திவருதல்.
-
சிறப்பு:
பெருமை, திருவிழா, செல்வம், அன்பளிப்பு, மதிப்பு, தலைமை, பகட்டு.
மதச்சார்பின்மைக்கு
வழி வகுத்தவர் (Seculars State)
குறளில்
எந்தச் சமயக் கொள்கையும் முதன்மை பெறவில்லை. பொதுவான வாழ்வியல் நூல், வள்ளுவர்
சமயமே அறியத்தக்கதாக இல்லை. ஆயின் அறிஞர் பலர் வள்ளுவரின் சமயம் பற்றிப்
பின்வருமாறு குறிப்பிட்டுள்ளனர்:
-
சமணர்
- திரு.வி.க., வையாபுரிப் பிள்ளை, மயிலை சீனி வேங்கடசாமி போன்ற பலர்.
-
சைவர்
- மறைமலை அடிகளார், வச்சிரவேலு முதலியார் போன்றோர்.
-
இந்து
மதத்தினர் - எஸ். எம். டயஸ்
-
பௌளத்தர்
- அயோத்தி தாஸ்
-
வைணவர்
- புருஷோத்தம நாயுடு
இவ்வேறுபாடே
அவர் மதச்சார்பின்மைக்கு ஆதாரம் எனலாம்.
உழைப்பின்
உயர்வு - Dignity of Labour
உழைப்பைப்
பொதுவாக இருவகையாகப் பகுக்கலாம்: 1. அறிவுழைப்பு (Knowledge Work), 2. உடலுழைப்பு
(Manual Work). இவற்றில் இரண்டாவது குறைத்தே மதிப்பிடப்படுகிறது.
-
மனு
: சூத்திரர்கட்கு உரியன வேளாண்மை, உடல் உழைப்பு.
-
பிளேட்டோ
: இரும்புத் தரத்திரனருக்கு உரியது வேளாண்மை.
-
கேம்ப்ப
நெல்லா : அறிவுத் திறன் குறைந்தவருக்கு உரியது உழவு.
இன்றும்
உடலுழைப்பு உயர்ந்த இடம் பெறவில்லை. ஆனால் வள்ளுவரோ உழவை உயர்த்திப் பிடிக்கிறார்.
| உழுதுண்டு
வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் |
| தொழுதுண்டு
பின்செல் பவர்
|
இது
வள்ளுவரின் கம்பீரமான பிரகடனம். உடல் உழைப்பை அந்தக் காலத்திலேயே உயர்த்திப்
பிடித்தவர் அவர்.
ஆட்சிமுறை
பற்றி வள்ளுவர்
-
மன்னர்
ஆட்சி, மக்கள் ஆட்சி, சமதர்மக் குடியாட்சி, சர்வாதிகாரம் போன்றவற்றின் நன்மை,
தீமைகளை ஆராய வள்ளுவர் முற்படவில்லை. எதையும் அவர் பரிந்துரைக்கவில்லை. எதுவும்
நிரந்தரமில்லை. தொடர்ந்து மாறக்கூடியது என்பது அவரது கொள்கை. எனவே எல்லா
ஆட்சிகட்கும் பொதுவான உறுப்புகளின் பண்புகளை விளக்குகிறார்.
-
ஆட்சி
எதுவானாலும் ஒரு தலைமை; அத்தலைமைக்குத் துணைபுரிய ஆலோசகர், வல்லுநர், படை போன்றவை
வேண்டும். இவை போன்றவற்றின் குணாதிசயங்களை மட்டும் வள்ளுவர் பேசுகிறார். எந்த
முறையையும் அவர் முன்வைக்கவில்லை. முன்வைப்பது நிற்காது என்பது அவரது அசைக்க
முடியாத நம்பிக்கை எனலாம்.
அறிவியல்
பார்வை - அறிவியல் அணுகுமுறை
பண்டிதர்
நேரு அறிவியல் பார்வை, அறிவியல் அணுகுமுறையை வாழ்நாள் முழுவதும் மக்களுக்குப்
போதித்தார். அறிவியல், தொழில்நுட்பம் செய்த பெரிய நன்மை அவற்றால் உற்பத்தியான
பொருள்களைவிட அறிவியல் அணுகுமுறையைத் தந்ததுதான்.
வள்ளுவரின்
இரண்டு குறள்கள் அறிவியல் உலகில், அறிவு சார்ந்த நடைமுறை உலகில் பொன் எழுத்துகளில்
பொறிக்கத்தக்கவை. அவை அறிவியல் அணுகுமுறைக்கு இலக்கணம் போன்றவை.
| எப்பொருள்
யார்யார்வாய்க் கேட்பினும் |
| அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு |
| எப்பொருள்
எத்தன்மைத்து ஆயினும் |
| அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு |
-
சொல்பவர்
யாராயினும், சொன்னது எதைப் பற்றியாயினும் நாம் ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும்
என்பது ஒரு கருத்து.
-
மற்றொரு
கருத்து, முடிவு செய்யும் உரிமை நமக்கு இருப்பது போலவே ஒருவருக்கு அவரது கருத்தைச்
சொல்லும் உரிமையும் வேண்டும் என்பது.
உண்மையைச்
சொல்ல அச்சம் நிலவிய சூழலில் உண்மைக்காகத் தியாகம் செய்தோர்
-
காப்பர்
நிக்கஸ் Copenicus (1473 - 1543)
-
புருனோ
Bruno (1548 - 1600)
-
கலிலியோ
Galileo (1564 -1642)
-
டார்வின்
Darwin (1809 - 1882)
-
மற்றோர்
ஊழ்
விதி போன்ற பிரச்சினைகள்
-
விதி,
இறைவன், முற்பிறப்பு, அடுத்த பிறவி போன்றவற்றில் தீர்வு காண முடியாது. வாதங்கள்
பயனில என்பதை உணர்ந்தவர் வள்ளுவர். அன்றும் சரி, இன்றும் சரி, நாத்திகர் தவிர
அனைவருமே விதியை நம்புகிறார்கள். இப்பிரச்சினைகளில் நடைமுறைக்கு ஏற்ற வழியை
திருவள்ளுவர் முன்வைக்கிறார். விதி இருப்பதாகவே வைத்துக் கொள்வோம்.
| வகுத்தான்
வகுத்த வகையல்லால் கோடி |
| தொகுத்தார்க்கும்
துய்த்தல் அரிது |
என்று
ஊழின் வலிமை பேசுகிறார்.
ஊழ்
என்பது இல்லையேல் பிரச்சினை இல்லை; வள்ளுவரின் திட்டத்தின்கீழ் அது இருந்தாலும்
பரவாயில்லை: ஏனெனில்,
| ஊழையும்
உப்பக்கம் காண்பர் உலைவுஇன்றித் |
| தாழாது
உஞற்று பவர் |
| தெய்வத்தான்
ஆகாது எனினும் முயற்சிதன் |
| மெய்வருத்தக்
கூலி தரும் |
என்று
வலிமை வாய்ந்த ஊழை உறுதியான உழைப்பு வெல்லும், என மனித முயற்சியை உயர்த்திப்
பிடிக்கிறார். வள்ளுவர் போல மனித முயற்சியைப் போற்றியவர் யாருமில்லை.
இதில் யாருக்கும் கருத்து வேற்றுமை இருக்க இடமில்லை.
இலட்சியப்
பாதையில் தடைவந்தால் குறிக்கோளுக்கு மாற்று வழி காண்பவர்
கருமம்
சிதையாத கண்ணோட்டம் குறித்துத் திருவள்ளுவர் பேசுகிறார். கண்ணோட்டம் என்பதனை உடம்
பயின்றார் கூறியமை மறுக்க மாட்டாமை எனப் பரிமேலழகர் வரையறுக்கிறார்.
| மண்ணோடியைந்த
மரத்தனையர் |
| கண்ணோ
டியைந்து கண்ணோடா தவர் |
| ஓர்ந்துகண்
ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் |
| தேர்ந்துசெய்
வஃதே முறை |
| சமன்செய்து
சீர்தூக்கும் கோல்போ லமைந்துஒருபால் |
| கோடாமை
சான்றோர்க் கணி |
இக்குறள்கள்
தமக்குள் சற்று முரணான கடமைகளை முன்வைப்பது போன்று தோன்றலாம். முரண்களுக்கு
வள்ளுவர் எப்பொழுதும் தீர்வு காண்கிறார். அதுவே வள்ளுவத்தின் வலிமை.
| கருமம்
சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு |
| உரிமை
உடைத்துஇவ் வுலகு |
இது
எவ்வாறு முடியும்? இயன்றதை இயன்ற வழியில் செய்ய முயல வேண்டும். பின்வரும் சான்றால்
இதனைத் தெளியலாம்.
அமெரிக்காவில்
உள்ளது மின்சக்தி மின்னணு பொறியாளர் கழகம் ( Institution of Electrical and
Electronic Engineers ). இதன் ஒழுக்க விதிகள் ( Code of Ethics : III Millennium )
எல்லா இடங்களிலும் கடைப்பிடிப்பது எளிதாக இல்லை. எனவே ஒழுக்க விதிகளை
இக்கழகத்தினர் இரண்டாகப் பிரித்தார்கள்:
-
Principle
Ethics தத்துவ ஒழுக்கம்
-
Applied
Ethics நடைமுறை ஒழுக்கம்
நடைமுறை
ஒழுக்கமானது தத்துவ ஒழுக்கத்திலிருந்து விலகிச் செல்ல அனுமதிக்கிறது. IEEE :
Applied Ethics allows for deviation from principle ethics when it is for the
legitimate benefit of others.
நாம்
பேசும் உண்மையினால் ஏற்படும் விளைவிற்கு நாமே பொறுப்பேற்க வேண்டும். உண்மையைச்
சொன்னால் அதன் பக்க விளைவுகளில் நமக்குப் பொறுப்புண்டு. நாம் உண்மை சொல்வதன் மூலம்
வேறு சிலருக்குப் பெருந்தீங்கு நேரலாம். அப்பொழுது உண்மை சொல்வது தவிர்க்கப்பட
வேண்டும். IEEE கொடுக்கும் உதாரணம்: An extreme example would be the
permissibility of telling a lie to protect refugees from an authoritarian
military regime.
இங்கு
வள்ளுவர் கொடுத்திருக்கும் தீர்வைப் பார்ப்போம்.
| பொய்மையும்
வாய்மை இடத்த புரைதீர்த்த |
| நன்மை
பயக்கும் எனின் |
என்று
கூறியவர், யாரும் கூறாத வகையில் வாய்மைக்கு ஒரு இலக்கணம் வகுக்கிறார்: புரைதீர்ந்த
நன்மை என்பதற்கு என்ன அளவுகோல். இதற்கு IEEE Ethics Code கூறுவது: In those cases,
the engineer is advised to do what his conscience suggests. இப்படிப்பட்ட
சமயங்களில் தன்னுடைய முடிவு மனித சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதினால்
தன் மனச்சான்றின் படி முடிவு செய்யலாம்.
இங்கு
வள்ளுவர் கூற்று:
| உள்ளத்தால்
பொய்யாது ஒழுகின் உலகத்தார் |
| உள்ளத்துள்
எல்லாம் உளன் |
எனவே
மூன்றாவது Millennium IEEE ஒழுக்க விதிகட்கு 2000 ஆண்டுகட்கு முன்பே வள்ளுவர்
வழிவகுத்திருக்கிறார் எனத் துணியலாம்.
தமிழ்
வாழ்க்கையில் புகழ்
-
தமிழர்கள்
புகழைப் போற்றியவர்கள்; புகழ் நிறைந்த தனி மனிதர்களால்தாம் உலக முன்னேற்றம்
நிகழ்கிறது என்பது அவர்களது நம்பிக்கை.
-
புகழொடு
வாழ்வது தனிமனிதர் கடமை. தோன்றின் புகழொடு தோன்றுக என்பது வள்ளுவம்.
-
புகழ்
மிக்கவர்களை உருவாக்குவது சமுதாயக் கடமை.
| வசையிலா
வண்பயன் குன்றும் இசைஇலா |
| யாக்கை
பொறுத்த நிலம் |
என்பது
வள்ளுவம். ஒரு சமுதாயம் எதைப் போற்றுகிறதோ, எதை ஆதரிக்கிறதோ அது உருவாகும்;
வளரும். மகாகவிகளைப் போற்றும் நாட்டில் மகாகவிகள் தோன்றுவார்கள்.
கல்வி
யுகம்
| அறிவுடையார்
எல்லாம் உடையார் |
| அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர் |
அறிவுடையார்
எல்லாம் உடையார் என்பது கல்வி யுகத்தின் முழக்கம்.
[
மேலே இடம்பெற்றவை சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித்துறையில் திருமதி
சொர்ணம்மாள் அறக்கட்டளையின் சார்பில் மார்ச்சு 22, 2007இல் நிகழ்த்திய
சொற்பொழிவின் சுருக்கக் குறிப்புகள் ].