கிருபானந்தவாரியார் சுவாமிகள் குகனைத் துதிப்பதையும் சைவசமயக் கருத்துக்களைப் பரப்புவதையும் தன் மூச்சாய் கொண்டு வாழ்ந்தவர். பிரசித்தி பெற்ற தலங்களுக்குத் திருப்பணி செய்யப் பல அன்பர்களிடம் உதவி கேட்டவர். தனது ஊர் திருக்கோவில் திருப்பணியை தான் உழைத்த பணத்தால் செய்ய விரும்பி, வெளிநாடு சென்றவர். நான்கு மாதங்கள் இடைவிடாது சொற்பொழிவாற்றிக் கிடைத்த அத்தனை பணத்தையும் காங்கேய நல்லூருக்கு அனுப்பியவர்.
தான் மலாயாவில் சந்தித்த அனுபவங்களையும், நபர்களையும், முக்கிய தலங்களையும் தனக்கே உரித்தான பாணியில் தேதிவாரியாக எழுதியுள்ளார்.
சுவாமிகள் காஷ்மீர் அமர்நாத் யாத்திரை பற்றி எழுதியிருப்பவை நம்மை மெய்சிலிர்க்கச் செய்கின்றன. நேரில் காண்பதுபோல் உள்ள அவரின் எழுத்து நடை அமர்நாத் செல்லும் ஆசையைத் தூண்டுகிறது.
--- ஜூன் 2005 ---