தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழ் வளர்த்த மாமுனிவர் மங்கலங்கிழார்
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு (2006)
ஆசிரியர் :
மோகனரங்கன், கோ ஆலந்தூர்
பதிப்பகம் : எம்.வெற்றியரசி
Telephone : 914422530954
விலை : 80
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 204
புத்தக அறிமுகம் :
தமிழிற்காகவே உழைத்து உழைத்து மறைந்துபோன சான்றோர் மிகப் பலர். அவர்கள் உழைப்பினால் இன்று தமிழ் வாழ்ந்து கொண்டுள்ளது. அப்படிப்பட்டவர்களில் மங்கலங்கிழார் அவர்களுக்கு ஓர் மறுக்கப்படமுடியாத இடமுண்டு. தமிழ்நாட்டின் வட எல்லைப்போராட்ட வீரர் மங்கலங்கிழார் பற்றி, அவருடன் தொடர்புடைய பல அறிஞர்களின் பார்வைகள் ஒருங்கே பதிப்பாசிரியர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் அவர்களால் தொகுக்கப்பட்டு நூல் வடிவில் வந்துள்ளது.
ஊடக மதிப்புரைகள்
1
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : யாதும் ஊரே
மதிப்புரை வழங்கியவர் பெயர் : ஆசிரியர் குழு

தமிழகத்தின் வடவெல்லைப் பகுதியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர். தமிழார்வமுள்ள சிற்றூர் மக்களுக்குத் தமிழ் கற்பித்து அவர்களைப் புலவர்களாக்கிய பெருமகன். தமிழிற்காக தன்னையே ஈந்த தகைமையாளர். இன்றைய இளைஞர்களும் இவர்தம் அருமை பெருமையுணர்ந்து தமிழுக்காகத் தங்களையே ஈகம் செய்ய முன்வர வேண்டும் என்ற வேணவாவுடன் தமிழ் மாமுனிவர் மங்கலங்கிழாரின் பன்முக ஆற்றல்களை 57 தமிழறிஞர்களின் கட்டுரைகளின் வழி ஆசிரியர் இந்நூலில் விளக்கியுள்ளார். தமிழ் வளர்த்த சான்றோர்களை மறவாது போற்றி ஒழுக வேண்டும் என்னும் தாக்கத்தை இந்நூல் நமக்கு ஏற்படுத்துகிறது. - - - 11.06.2007 - - -

1

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan