தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


அது-இது-எது?
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு(ஜூலை 2008)
ஆசிரியர் :
முத்தையா வெள்ளையன்mvellaian@gmail.com
பதிப்பகம் : கருப்புப் பிரதிகள்
Telephone : 919444272500
விலை : 65
புத்தகப் பிரிவு : நேர்காணல்கள்
பக்கங்கள் : 150
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
தமிழகத்தின் பல்வேறு ஆளுமைகளுடனான நேர்காணல்கள். எழுதப்பட்ட வாக்கியங்களை விட உரையாடல் முக்கியமானது. விரிவான புரிதல்களை சாத்தியமாக்குவது. தமிழின் வரலாறு, இலக்கியம், சமூக அரசியல், நாடகம், பால் நிலை, புலம்பெயர்ச்சூழல், எனப் பல்வேறுபட்ட தளங்களில் இயங்கிவருகின்ற சிவத்தம்பி, சுபவீ, மௌனகுரு, வெண்ணிலா, டேவிட், மாத்தளை சோமு, அ.சிவசுப்பிரமணியன், ஆஷா பாரதி, யூமா வாசுகி, சிந்தாமணி உள்ளிட்ட 10 ஆளுமைகளுடனான நேர்காணல்களை முத்தையா வெள்ளையன் இந்நூலில் பதிவு செய்துள்ளார்.
ஊடக மதிப்புரைகள்
1 2
மதிப்புரை வெளியான நாள் : 2009.01.28
மதிப்புரை வழங்கிய இதழ் : தீக்கதிர்
மதிப்புரை வழங்கியவர் பெயர் : ஆசிரியர் குழு

நேர்காணல்கள் என்பது பொதுவாக பத்திரிகைகளில் மட்டுமே வெளிவரும். நேர்காணல்கள் இலக்கிய அந்தஸ்து பெறுவது ஆபூர்வம். சுபமங்களா ஏட்டில் வந்த நேர்காணல்கள் பெருந்தொகுப்பாக வெளிவந்து இன்னும் வலுவாய் பேசிக்கொண்டிருக்கின்றன. தற்போது நேர் காணலும் ஒரு இலக்கிய வகையே என்று உறுதியுடன் முத்தையா வெள்ளையன் மேற்கொண்ட நேர்காணல்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மாத்தளை சோமு, ச.அ.டேவிட், ஆஷாபாரதி, கார்த்திகேசு சிவத்தம்பி, மௌனகுரு, சுப.வீரபாண்டி யன், யூமா வாசுகி, ஆ.சிவ சுப்பிரமணியன், சிந்தாமணி, அ.வெண்ணிலா ஆகியோரின் நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன. “வெவ்வேறு கருத்தாக்கத் தளத்தில் நின்று செயல்படும் இவர்களிடம் முத்தையா வெள்ளையன் கேள்விகளை வைத்த முறையில் அவருடைய அரசியல் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு எதிர்நிலை எடுத்து பதில் சொல்வோரிடமுள்ள முரணை வெளிக்கொணருகிறார் என்கிறார் முன்னுரையில் ராமானுஜம்.

 

1 2

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan