தமிழக அரசு வேளாண்மைத் துறையிலும், திருச்சி அகில இந்திய வானொலியிலும், சிங்கப்பூர் ஒலிபரப்புக் கழகத்திலும், பகுதி நேரமாக எண்டியுசி வானொலியிலும் பணியாற்றியவர். சிங்கப்பூர்த் தமிழர் பேரவையின் திங்களிதழான சிங்கைச் சுடரில் "தமிழ்தான் தமிழரின் முகவரி" என்ற முழக்கவரிகளோடு ஒற்றை ஆசிரியராக நான்காண்டுகள் பணியாற்றியவர். "வியர்வைத்தாவரங்க்ள" "இரவின் நரை" என்பன இவரது கவிதை நூல்கள். "பதிவதி ஒரு காதல்" "விலங்குப் பண்ணை" என்பன இவர் எழுதிய நாடகங்கள். சிங்கப்பூரில் "கடற்கரைச் சாலைக் கவிமாலை" என்ற கவிஞர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை 2000 ஆண்டில் இருந்து நடத்தி வருகிறார். பதிவுகள், திசைகள், திண்ணை, கீற்று இணைய இதழ்களில் இவரது ஆக்கங்கள் வெளிவந்திருக்கின்றன. குமுதம், கணையாழி, தினமணிகதிர், தமிழ் முரசு, தமிழ் நேசன் இதழ்களில் இவரது கவிதைகள் வெளிவந்திருக்கின்றன.